Thursday 27 May, 2010

பந்து

நேற்று பீச்சில் நடந்து போகும்போது சிறுவன் பெரிய கால்பந்தை கடலுக்குள் அடித்து விளயடிகொண்டிருந்தான், பந்து அலையில் பட்டு திரும்ப அவன் காலுக்கே வந்து சேர்ந்தது. இங்கிருந்து அடிக்கும்போது அலை அதை உள்வாங்கி கரைக்கு வரும்போது பந்தையும் சேர்த்து கொண்டு சேர்த்தது. குஷியாக விளையாடிகொண்டிருந்த அவன் ஒரு முறை அடித்தபோது பந்து திரும்ப வரவில்லை, அலை பின்னோக்கி எடுத்து சென்றுவிட்டது. கொஞ்ச நேரம் கடலை உற்று பார்த்த சிறுவன் அழ ஆரம்பித்துவிட்டான், கிட்டே சென்று சமாதனம் செய்யலாம் என்று போனபோது அவன் சொன்னான் "பந்து தொலைந்ததுக்காக அழவில்லை வீட்டுக்கு போனால் அம்மா கத்துவார்கள் என்ன பதில் சொல்ல?"

விளையாடினால் பந்து தொலைய தானே செய்யும் இந்த உண்மை ஏன் புரியவில்லை?

Saturday 27 March, 2010

அவர்

சென்ற வருடம் ஆகஸ்ட் 16 அவர் வந்த போது இருந்த பரபரப்பு மீண்டும் தொற்றிக்கொண்டது, மதியம் அண்ணா கூப்பிட்டு சொன்னபோது. உடனே மனைவியிடம் கைத்தொலைபேசியில் சொன்னபோது, மறுமுனயில் நிசப்தம். சில நொடிகளுக்கு பிறகு சொன்னது சந்தோஷமாக இருந்தது "எப்படி நம்ம ஊர் இந்த பட்டியலில்?"
சென்ற முறை அவர் வந்தது பள்ளிக்கூடத்தை பார்க்கவும், ஆசிரியர்கள், பெற்றோர், மாணவர்களை சந்திக்கவும் தான். பள்ளிக்கூடம் ஊரிலிருந்து 16 கி. மி. தள்ளி இருப்பதால் ஊருக்குள் வரவேயில்லை. தான் நினைத்தபடி பள்ளி அமைந்திருப்பதாக சொன்னபோது அடைந்த சந்தோஷத்திற்கு அளவில்லை. மனைவியிடம் பள்ளியை உன் வீடு போலவும், பள்ளி குழந்தைகளை உன் குழந்தைகள் போல பாவிக்கவும் சொன்னார். அந்த பெரிய கருப்பு நிற காரில் ஏறும் முன் மனநிறைவோடு சொன்னார் "குழந்தைகளும், ஆசரியர்களும் நல்ல நிலையில் உள்ளனர்" . பின்னர் மலை அடிவாரத்தில் உள்ள அவர் இருப்பிடத்தில் தன் சிஷ்யர்களிடம் எங்கள் ஊர் பள்ளியை பற்றி சிலாகித்து சொன்னாராம்.

அப்போது வந்தபோது ஊருக்குள் வருமாறு அழைத்தோம், பின்னர் வருகிறேன் நிறைய வேலைகள் காத்துக்கொண்டிருப்பதாக சொன்னார். அது மறுபடியும் நிறைவேறும் என்று நம்பவில்லை, அதுவும் எங்கள் ஊரில் ஒரு சத்சங்கம் என்று சொன்னபோது மக்கள் அனைவர்க்கும் ஆனந்தம்.

டிசம்பரில் அவர் வருகிறார், காத்திருக்கிறோம் !!