Wednesday 19 December, 2007

நான்

எளிதினும் எளிதாய்
அரிதினும் அரிதாய்
கருணையின் மெல்லிய வாசமாய்
கைகொள்ளவோ சக்தியின் பிரவாகமாய்
மேலான இதற்கு வெட்கமுமில்லை
பாவ புண்ணியக் கரைகளும் இல்லை
ஏறவே முடியாத முகடு போல் தோன்றலாம்
ஆனால் எளிதில் அணுகக்கூடிய பாலம்தான்
எல்லாம் கடந்த நிலைக்குப் பயணமாக முடியும்
உங்களைவிட்டு வந்திட முடிந்தால் மட்டும்!
- சத்குரு ஜக்கி வாசுதேவ்

No comments: